அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால்

அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் பிரச்சனை வருமா?

பிரியாணி… ஆ அதன் நிறம், மணம், சுவை பார்த்தலே நாவில் எச்சில் ஊறும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணிக்கு அடிமையாகாதவர்கள் இருக்கவே முடியாது. பிறந்தநாள் விழா முதல், இறப்பு சம்பவம் வரை ‘பிரியாணி விருந்து’ போடுவது நம் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்துவிட்டது. இப்போதெல்லாம்
‘பிரியாணி’ இல்லாத விழாக்களே இல்லை.

தரமற்ற உணவுகளைச் சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் முதலில் ஏற்படும்.அதற்குப் பிரியாணியும் விதிவிலக்கல்ல. ஆனால், பிரியாணி, இறைச்சியுடன் இருப்பதால் கூடுதலாக சிலஉடல்நலப் பாதிப்புகளும் ஏற்படுகிறது. பிரியாணி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைத்தாலும் அதை தினமும்
அதிகளவு எடுத்துக்கொள்வதால் உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியது
அவசியம். பிரியாணியால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி பார்ப்போம்!

வயிற்று எரிச்சல் : வயிறுபுடைக்க பிரியாணி சாப்பிடுதல், சரியாக மென்று சாப்பிடாமல் வேக வேகமாக அவசரகதியில் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்றில் எரிச்சல் உண்டாகிறது. மேலும் சரி வர சமைக்காத இறைச்சி,
வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகும்.

உடல்பருமன் : அதிகமாக பிரியாணி சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35%வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை
உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் உண்டாகிறது.

சர்க்கரை அளவு : நீங்கள் பிரியாணியுடன் இனிப்பு டிஷ் அல்லது ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டால் நம் உடலில் கூடுதல் கார்போஹைட்ரேட் சேரும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க அபாயம் உள்ளது.

இதய நோய் : பிரியாணி தயாரிக்கும் போது அதிகப்படியான எண்ணெய்யை பயன்படுத்துவதால், அது உங்களுக்கு இதய நோய் வரக் காரணமாக அமைகிறது. இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அதிகமாகும் போது உடல் நல அபாயத்தை மேலும் அதிகரிக்கக்கூடும்.

வயிற்றுப் புண் : பிரியாணி சாப்பிடும்போது குளிர்பானங்களைச் சேர்த்து குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண் போன்ற பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.