இரண்டு முககவசம் அணிவது அவசியமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?
கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவதை தவிர வேறு வழியில்லை என்றாகிவிட்டது. அதே நேரம் மாஸ்க் அணிவதிலும் மிகுந்த கவனம் தேவை என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பெரும்பாலானவர்கள் 3 முதல் 5 அடுக்குகள் கொண்ட ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ மாஸ்க்கு அதாவது சர்ஜிக்கல் மாஸ்க்களை பயன்படுத்துகிறார்கள்.
அதிலும் சிலர் ஒரு மாஸ்கை அணிந்து அதன் மேல் கூடுதலாக ஒரு துணை மாஸ்கையும் சேர்த்து அணிந்துவருகிறார்கள். இந்த மாதிரி இரட்டை மாஸ்க் அணிவது சரியா? அவ்வாறு அணிவது அவசியமா? என்று கேட்டபோது மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:-
மாஸ்க் அணிவது என்பது நமது உடலில் இருந்து வைரஸ் வெளியே பரவாமல் இருக்கவும், அதே நேரம்வெளியில் இருந்து வைரஸ் நம் மூக்கு வாய் பகுதியில் நுழையாமல் இருக்கவும் தான்.ஆனால் முககவசம் அணியும் போது சிலருக்கு அது சரியாக பொருந்தாமல் இருக்கலாம் அதற்காக சிலர் இந்த
மாதிரி துணி மாஸ்கையும் கூட அணிந்து இறுக்கமாக்கி கொள்கிறார்கள். சிலர் காது பகுதியில் ஒரு முடிச்சுபோட்டு ‘டைட்’ ஆக்கி முககவசம் அணிந்து கொள்கிறார்கள்.
நாம் முககவசம் அணிந்து இருக்கும் போது மூக்கின் மேல் பகுதி வழியாக காற்று உள்ளே வருகிறதா? வாயின்அடிப்பகுதியில் தாடை பகுதி வழியே காற்று உள்ளே வருகிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.ஏனெனில் அதன் வழியாக கூட வைரஸ் உள்ளே வர வாய்ப்பு அதிகம்.
இந்த இரட்டை முககவசத்துக்கு பதில் என்-95[N-95], கே.என்-95[KN-95] ஆகிய முககவசங்களை அணிந்தால் பொருத்தமாக,இருக்கும் என்றனர்.