உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் போன்ற பதவிகளுக்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி, எழுத்துத் தேர்வு நடக்கும்’ என TNPSC அறிவித்துள்ளது.
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட, செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தபடி, உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் உள்ளிட்ட பதவிகளுக்கு, திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வு நடக்கும். வரும், 17 மற்றும், 18 ஆகிய நாட்களில், காலை மற்றும் மதியம்; 19ம் தேதி காலை மட்டும், ஏழு மாவட்டங்களில், தேர்வு நடைபெற உள்ளது
விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டை, www.tnpsc.gov.in; www.tnpscexams.in வெப்சைட்டில், தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, Download செய்து கொள்ளலாம்.தேர்வு நடக்கும் இடத்தை அறிந்து கொள்ள, Hall Tickets-இல், ‘QR கோடு’ அச்சிடப்பட்டுள்ளது. அதை, ‘ஸ்கேன்’ செய்து, ‘கூகுள் மேப்’ வழியே, தேர்வுக்கூடம் செல்லலாம். தேர்வு அறைக்குள், மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி கிடையாது!