சொந்த வீடு வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை

சொந்த வீடு வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை?

கொரோனா பெருந்தொற்று காரணமாக, சொந்த வீட்டிற்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது.
மேலும் சொந்த வீடு வாங்குபவர்கள், வீட்டின் அளவு பெரிதாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
வீட்டில் இருந்து வேலை செய்யும் சூழல் இதற்கான காரணமாக அமைகிறது.

உடனடி வீடுகள் தேவை:

அதிகரிக்கும் தேவை காரணமாக, வாங்கியவுடன் குடியேற வசதியாக உள்ள வீடுகளுக்கு கிராக்கி உண்டாகும்என
கருதப்படுகிறது. தற்போது பலரும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளையே
விரும்பிகின்றனர். இரண்டாம் கொரோனா அலை அச்சம் காரணமாக கட்டுமான பணிகள் தாமதமானால், இந்த
பிரிவில் மேலும் கடும் கிராக்கி அதிகரிக்கும்.

விலை போக்கு:

தற்போது ரியல் எஸ்டேட் துறையில் நிலவிய தேக்கம் காரணமாக விலையும் அதிகம் உயராமல்
இருந்து வந்தது. தற்போது பெரிய வீடுகளுக்கான தேவை மற்றும் புதிய திட்டங்கள் குறைந்து
இருப்பதன் விளைவாக ஒரு சில பிரிவுகளில் வீடுகளின் விலை உயரலாம் என
கணிக்கபடுகிறது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பிரிவில் இதன் தாக்கம் சற்று அதிகம் இருக்கும்.

வட்டி விகிதம்:

வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை பொருத்த மட்டில் இதுவரை சாதகமான போக்கு நிலவுகிறது. இதுவரை
இல்லாத அளவில் வட்டி விகிதம் குறைவாக இருக்கிறது. ஆனால், வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு
இல்லை என கருதப்படுவதோடு, ஒரு கட்டத்தில் வட்டி விகிதம் உயரும் வாய்ப்பும் உள்ளது.

முதலீடு அல்ல:

ரியல் எஸ்டேட் துறை போக்குகளை கவனிக்கும் போது, சொந்த வீடு வாங்க காத்து இருப்பவர்களுக்கு
இது சரியான நேரம் என கருதலாம். ஆனால், இது சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமே பொருந்தும் என்பதை
நினைவில் கொள்ளுங்கள். முதலீடு நோக்கில் வீடு வாங்வதானால் மற்ற அம்சங்களையும் நன்கு பரிசீலித்து
முடிவு எடுப்பது அவசியம்!