கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் சில
கட்டுப்பாடுகளை விதிக்கவும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தினமும் பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கொரோனா தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஏற்கெனவே நடைமுறை படுத்தியுள்ளது. இருந்தாலும் தினமும் பதிவாகும் நோய் தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருவதால், அதனை
கட்டுப்படுத்துவது தொடா்பாக இந்த ஆலோசனை நடைபெற்றது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எந்த மாதிரி கட்டுப்பாடுகளை விதிப்பது, பிளஸ் 2 தோ்வை
நடத்தலாமா? வேண்டாமா? என்பன உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் என்று எதிர்பாக்கலாம்.