கொரோனா இரண்டாவது அலை

குழந்தைகள் பத்திரம்; கொரோனா 2 ஆம் அலை!

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் 7,987 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின்
மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்வு.

கொரோனாவால் பாதிப்பு அடைந்த 7,987 நபர்களில் 2558 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள். கொரோனா இரண்டாவது அலையில், குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1 – 8 வயதுள்ள குழந்தைகள் கொரோனாவால் இந்த ஆண்டு அதிகம் பாதித்துள்ளதாகவும், இது 2020 ஆண்டை விட பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். குழந்தைகளுக்கு பரவும் கொரோனா நோய் அறிகுறிகள் (தலைவலி,காய்ச்சல்,மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு)காட்டப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். முக்கியமான விஷயம் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை!