தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த ஆண்டு 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்,தேர்வுகளை அதிரடியாக ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
அதில், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திஇருந்தாலே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ததில் தற்போதுஅனைத்து அரியர் மாணவர்களுக்கும் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இந்த தேர்வு வரும் மே மாதம்ஆன்லைன் மூலம் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் முறையிலோ அல்லது ஆப்-லைன் முறையிலோ அனைத்துஅரியர் மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும். தேர்வு நடத்தும் தேதி குறித்து பல்கலைகழக மானிய குழுவின் ஆலோசனை பெற்று முடிவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களை 8 வாரத்துக்குள் விரைந்துவழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.