நோயாளிகளை தேடி நேரடியாக வரப்போகும் ரெம்டெசிவர் மருந்து!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, தற்போது தனியார் மருத்துவமனைகள் மூலம், சென்னை, கோயம்புத்தூர்,சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாகவும் இந்த மருந்து வழங்கப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில் தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்து முன்பதிவு செய்வதற்கான தமிழக அரசின் புதிய இணைய சேவை தொடங்கி உள்ளது. தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்றாளர்களின் விவரங்களோடு http://tnmsc.tn.gov.in என்ற வெப்சைட் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளை தேடி ரெம்டெசிவிர் மருந்து வரப்போகிறது.