அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் 2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 2021ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.
அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2,500, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். வீடு வீடாக சென்று அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும். எந்த தேதியில் யார் வர வேண்டும் என்று டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும்.