சேலம் மாவட்டம்|SALEM DISTRICT|கோயில்கள் மற்றும் மசூதிகள் 01
அப்பா பைத்தியசாமி கோவில்:
1859 கரூரில் ஜமீன் பரம்பரையில் பிறந்த அப்பா பைத்தியசாமி என்பவர் முக்தி பெற்று சமாதி அடைந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். தை மாதம் அஸ்வினி திதியில் வரும் அவருடைய குருபூஜைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே வழிபடுவார்கள். இது சேலம் இரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் உள்ளது.
வழிபாட்டு நேரம் :காலை 5.30 முதல் மதியம் 12 வரை , மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை
ஆறகலூர் :
ஆறகலூர் மிகப்பழங்காலத்திலேயே புகழ் பெற்ற ஆன்மீகத்தளமாக விளங்கியுள்ளது. பழங்காலத்திலேயே இவ்வூருக்கும் ஆன்மீக தலைநகரமாக விளங்கிய காஞ்சிக்கும் தொடர்புகள் இருந்துள்ளன. இங்கு இரண்டு சமயங்களான சைவம் மற்றும் வைணவத்திற்குரிய கோவில்களாக காமநாதீஸ்வரர் கோவில் மற்றும் கரிவரதபெருமாள் கோவில்கள் உள்ளன. இங்குள்ள காமநாதீஸ்வரர் கோவிலில் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளன. இங்கே பைரவருக்கு நடைபெறும் தேய்பிறை அஸ்டமி பூஜை பல்லாயிரகணக்கான மக்கள் வந்து வழிபடும் விழாவாகும். இதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்த ஊருக்கு அருகாமையில் உள்ள தியாகனூர் என்ற கிராமத்தில் ஒரே கல்லாலான மிகப்பெரிய புத்தர் சிலை உள்ளது.
தொலைபேசி .04582-260107.
அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவில்:
சேலத்திற்கு அருகில் 10 கி.மீ. தொலைவில் உள்ள அயோத்தியாபட்டிணத்தில் அமைந்துள்ள இக்கோவில் சேலம் மாவட்டத்தில் உள்ள புராதனமான கோவில்களுள் ஒன்றாகும். இது ஒரு அழகான விஷ்னு கோவிலாகும். தெய்வம் கோதண்டராமர் என்றழைக்கப்படுகிறார்.
வழிபாட்டு நேரம்:காலை 7 முதல் மதியம் 12வரை , மாலை4 முதல் இரவு 8 வரை
தொலைபேசி .0427-2253500, 8098127383.
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் :
சேலதிலிருந்த 33 கி.மீ தொலைவிலும் மேட்டூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ள பேரூராட்சியான மேச்சேரியிலும் காளியம்மன் கோவிலாகும்.
வழிபாட்டு நேரம். காலை 6 முதல் இரவு 8 வரை
தொலைபேசி . 04298-278133
ஜம்மா மசூதி:
சேலம் நகரத்தின் மையத்தில் திருமணிமுத்தாற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள ஜம்மா மசூதியாகும் மிகப்பழமையானதாகவும், மைசூர் அரசர் திப்புசுல்தான் அவர்களால் கட்டப்பட்டதாகும். அவர் இங்கு வழிபாடுகள் நடத்தியும் உள்ளார் என அறியப்படுகிறது.
வழிபாட்டு நேரம்: காலை 9.30 முதல் மாலை 6 வரை
தொலைபேசி : 0427-2267227.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் :
சேலத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில உள்ள ஒரு பேருராட்சி தாரமங்கலம். இங்கு அமைந்துள்ள கைலாசநாதர் கோவில் பழைவாய்ந்த கோவிலாகும். ரதி மன்மதனுக்கு இங்கு சிலைகள் உள்ளது. இக்கோவில் கற்சிற்பங்கள் மிக பிரசித்தி பெற்றதாகும்.
வழிபாட்டு நேரம்: காலை 7.30 முதல் மதியம் 1 வரை ம்லை 4 முதல் இரவு 8 வரை
தொலைபேசி.04290-252100.