ஆட்சி அமைக்கப்போவது யார்

ஆட்சி அமைக்கப்போவது யார்? – வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது துவங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 38 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. மேலும், தமிழகத்தில் ஏற்கனவே காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் எனவும், தமிழகத்தில் திமுக அதிக இடங்களை பிடிக்கும் எனவும் செய்திகள் வெளியான நிலையில், இன்று நாடு முழுவதும் தேர்தல் முடிவுகளை மக்கள் பரபரப்புடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.