இன்று சிறுவாபுரி 17.03.2024 | முருகனுக்கு பங்குனி மாதம் லட்சார்ச்சனை 🕉️ பக்தர்கள் பரவசம்! Siruvapuri Murugan!
சிறுவாபுரி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும்.
இங்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சுவாமியை தரிசனம் செய்வர்.
மேலும், இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில், மார்ச் மாதம், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம்.
இன்று லட்சார்ச்சனை நடைபெற்று காலை மூலவருக்கு 18 விதமான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. ரத்தினாங்கி சேவையில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத் தொடர்ந்து, 18 அர்ச்சகர்ள் வேத மந்திரங்கள் ஒலிக்க, லட்சார்ச்சனை நடந்தது.
இதில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.