2023 வடலூர் ஜோதி தரிசனம் நேரம்

2023 வடலூர் ஜோதி தரிசனம் நேரம்? Vadalur Vallalar 2023 | வடலூர் சத்திய ஞான சபை 2023

வள்ளலார் தை மாதத்தில் முக்தியடைந்ததால் தைப்பூச தினத்தன்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இந்த நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக வடலூர் சுற்று வட்டார பகுதி மக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. தைப்பூச விழாவிற்கு தமிழகம் மற்றும் உலகெங்கிலும் இருக்கும்
வள்ளலார் சபையினர் இங்கு வந்து ஜோதி தரிசனம் பார்த்து செல்வது வழக்கம். 2023 ஆண்டுக்கான விழா இன்று காலை(04.02.2023) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

 

பிப்ரவரி 5-ந் தேதி தைப்பூச தினத்தன்று காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் அதிகாலை 5.30 மணி என 6 வேளைகளில் 7 திரைகளை நீக்கி ஞானசபையில் ஜோதி தரிசனம் நடைபெறும், இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 7-ந் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரை வள்ளலார் முக்தியடைந்த சித்தி வளாகத் திருஅறை தரிசனம் நடைபெறும்.