Vijay TV Baakiyalakshmi Serial Story

Vijay TV Baakiyalakshmi Serial Story : பாக்யாவுக்கு தடை போடும் கோபி… எதிர்த்து நிற்கும் மகன்!

பாக்யா கணவன் கோபி இனி நீ பிஸ்னஸ் எல்லாம் பண்ண வேண்டாம் என ஆரம்பிக்க கோபி அம்மா ஈஸ்வரி இவ மேல என்ன தப்பு இருக்கு டா என கேட்கிறாள். இவ சமையல் செய்ய ஆரம்பிச்சதிலிருந்து தான் இவ்வளவு பிரச்சனை.

பாக்யா நீ பிஸினஸ் தொடங்கியதில் இருந்து ஒரே பிரச்சனைதான். நிம்மதியா இந்த வீட்ல இருக்க முடியுதா? நம்ம பசங்களுக்கு எவ்வளவு கஷ்டம் எவ்வளவு டென்ஷன் இனிமே நீ சமையல்
பிசினஸ் பண்ண வேண்டாம்.

பிசினஸ் பண்றேன் னு சொல்லிட்டு நீ வீட்டை விட்டு வெளியே போன அப்புறம் நடக்கிறதே வேற அவ்வளவுதான் சொல்லிட்டேன் என சத்தம் போட்டு விட்டு மேலே சென்று விடுகிறான் கோபி.
.

பாக்யாவிடம் ஈஸ்வரி ஏதோ கோபத்துல பேசிட்டு இருக்கான். விடு அப்புறமா பார்த்துக்கலாம் என கூறுகிறாள்.

இந்த பக்கம் எழில் ஆபீஸ்ல இருக்கும்போது அமிர்தாவுடன் பேசிக் கொண்டிருக்கிறான். வீட்டில் நடந்த விஷயங்களைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் அமிர்தா. அப்போது எழில் தோழி ஜானு உள்ளே வந்து விட பேசிட்டு இருக்கும்போது கதவைத் தட்டாமல் உள்ளே வாரிங்க மேன்னஸ் இல்லையா எனத் திட்டுகிறாள். பதிலுக்கு ஜானுவும் பேச இருவரும் சண்டை போடுகின்றனர்.

இருவரையும் எழில் சமாதானம் செய்கிறான். இந்த பக்கம் ஜெனி கோவிலுக்கு போயிட்டு அங்கு ராதிகாவை பார்த்து பாக்கியா வருத்தப்பட்டது பற்றி சொல்கிறாள். நீங்க அவுங்கள தப்பா நினைச்சுட்டீங்க. அத நெனச்சு ஆண்டி ரொம்ப கஷ்டப்படுறாங்க. இந்த பிசினஸ் தொடங்கவே நீங்க தான் காரணம் என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க சொல்ல, நான் அவங்க கிட்ட பேசுறேன் என ராதிகா சொல்றாங்க!

 

கோபி சொன்னதை கேட்டு வீட்டில் செழியன், இனியா இருவரும் பிஸினஸ் வேண்டாம் என சொல்கிறார்கள். பிறகு எழில் வர அவரிடம் செல்வி இந்த விஷயத்தை சொல்ல முயற்சி செய்ய எழில் அம்மா தடுத்து விடுகிறார். என்னாச்சு என எழில் எவ்வளவு கேட்டும் நான் நல்லாத்தான் இருக்கேன் என சொல்கிறாள் பாக்யா.

பிறகு அண்ணி ஜெனி அவனிடம் நடந்த விஷயத்தை சொல்ல அம்மாவிடம் சென்று அப்பா உன்னை பிசினஸ் பண்ண வேண்டாம்னு சொன்னாரா என கோவமா கேட்கிறான்? அப்பா எதுக்கு இத உங்கிட்ட சொல்லணும்? உனக்கு ஏதாவது ஒரு பிரச்சனைன்னா அவரா வந்து உதவி பண்றார்? அப்புறம் எதுக்கு அவர் இதை சொல்லணும்.

யார் என்ன சொன்னாலும் நான் பிசினஸ் பண்ணுவேன்னு நீ ஒத்த காலுல நில்லு. பிசினஸ் பண்றது எவ்வளவு பெரிய விஷயம் என எழில் சொல்றான். இத்துடன் இன்றைய பாக்யலக்ஷ்மி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.