Sivakasi Crackers 20.04.2022 பட்டாசு தொடர்பான வழக்கு தீர்ப்பு எப்போது

Sivakasi Crackers | 20.04.2022 | பட்டாசு தொடர்பான வழக்கு தீர்ப்பு எப்போது?

சிவகாசி பட்டாசு வழக்கு 2022; தற்போதைய நிலை(20.04.2022) என்ன? சரவெடி தயாரிக்க அனுமதி கிடைக்குமா?

தடை செய்யப்பட்ட பட்டாசுகள் இன்னமும் உற்பத்தி செய்யப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன
– உச்சநீதிமன்றம் மீண்டும் கருத்து!

பட்டாசு வழக்கில் தீபாவளி சமயங்களில் மட்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உத்தரவுகள்
பிறப்பிக்கப்படுகின்றன; ஆனால் தற்போது சட்ட விரோத பட்டாசுகள், சுற்றுச்சூழல்,CBI தாக்கல் செய்துள்ளஅறிக்கை,நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோத பட்டாசுகள் பயன்பாட்டில் இருப்பது உள்ளிட்ட அனைத்துஅம்சங்களையும் கருத்தில் கொண்டு விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது.

அதனால் வரும் ஜூலை 26ம் தேதி இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.
– நீதிபதி எம் ஆர் ஷா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு