நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி நேரடியாக களம் கண்டது. இதில் திமுககூட்டணி அமோக வெற்றிப்பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களும், திமுக தனியாக மட்டுமே 125 இடங்களும் உதய சூரியன் சின்னத்தில் 8 இடங்களும் வென்றுள்ளது.
அதிமுக கூட்டணி கட்சி தோல்வியை தழுவியது. அதிமுக கூட்டணி 75 இடங்களும் அதிமுக கட்சி 65
இடங்களும் பாமக 5, பாஜக 4, இதரவை 1 என 75 இடங்களை கைப்பற்றியது. திமுக அறுதிப்பெரும்பான்மை
பெற்றதால் அதிமுக ஆட்சியை இழந்தது. இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சேலத்திலிருந்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்*