முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி!

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி நேரடியாக களம் கண்டது. இதில் திமுககூட்டணி அமோக வெற்றிப்பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களும், திமுக தனியாக மட்டுமே 125 இடங்களும் உதய சூரியன் சின்னத்தில் 8 இடங்களும் வென்றுள்ளது.

அதிமுக கூட்டணி கட்சி தோல்வியை தழுவியது. அதிமுக கூட்டணி 75 இடங்களும் அதிமுக கட்சி 65
இடங்களும் பாமக 5, பாஜக 4, இதரவை 1 என 75 இடங்களை கைப்பற்றியது. திமுக அறுதிப்பெரும்பான்மை
பெற்றதால் அதிமுக ஆட்சியை இழந்தது. இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சேலத்திலிருந்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்*