2021 தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு!

2021 தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு!

2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 133 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கிறது!

இந்த தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் திமுக களப்பணி அதே நேரம்
3ஆவது முறை ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுக போராடியது. எனினும் மக்கள் என்ன
தீர்ப்பளித்துள்ளார்கள் என்பது மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று தெரியவரும்.

 

அரசியல் விமர்சகர்:

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பிலும் அரசியல் விமர்சகர்களின் பார்வையிலும் சரி இந்த முறை திமுகவே ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டது. அந்த வகையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஏபிபி சி வோட்டர், ரிபப்ளிக், தந்தி டிவி, இந்தியா டுடே, சாணக்கியா உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்தியது.

 

திமுக கூட்டணி வாய்ப்பு*
இந்த கருத்து கணிப்பில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பில் தமிழகத்தில் 234 தொகுதிகளில் திமுக 133
இடங்கலிலும் அதிமுக 68 இடங்களிலும் வெல்லும் வாய்ப்பு கணிக்கப்பட்டுள்ளது. அது போல் 33 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியிடையே கடும் போட்டி நிலவும்.

 

அதிமுக கூட்டணி

இந்த 33 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றாலும் 68+33=101 தொகுதிகள் மட்டுமே வருகிறது. எனவே அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மேலும் 234 தொகுதிகளில் அதிமுக 179 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் அதிமுக மட்டும் 63 இடங்களில் வெல்லும் வாய்ப்பு. 22
தொகுதிகளில் கடும் போட்டி நிலவ வாய்ப்பு!