2021 கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு செவ்வாய்கிழமை(ஏப்ரல்-20) முதல்
அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, புதிய கட்டுபாடுகளின் படி, இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு இருக்கும்.
ஞாயிறு முழு ஊரடங்கு அமல்:
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு ஊரடங்கின்போது ஆட்டே, பஸ், போன்ற தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை!
12 ஆம் வகுப்பு பொது தேர்வு 2021 ஒத்திவைப்பு!
* மே மாதம் நடைபெற இருந்த 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. செய்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடத்தப்படும்.
* ஓட்டல்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் வாங்க மட்டுமே அனுமதி.
*ஸ்விகி சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே உணவு விநியோகம் செய்யலாம்.
*தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. அதற்கு மேல் அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.மாஸ்க் அணியாமல் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டால் தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு போடப்படும்.
* மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையே இரவில் அரசு, தனியார் போக்குவரத்து அனுமதி இல்லை!
IT பணியாளர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
*அனைத்து சுற்றுலாதலங்களும் மூடப்படும்.
* இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஊடகங்கள் & பத்திரிகை துறையினர் இரவு நேரங்களில் தடங்கல் இன்றி செயல்படலாம்.
*மாநிலத்தில் பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல் இயங்க அனுமதி.
*கல்லூரி மற்றும் பேராசிரியர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்க அனுமதி
*இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருள்கள் உற்பத்தி, விநியோகம் செய்ய தடை ஏதும் இல்லை.
முழு நேர ஊரடங்கின் போது[ஞாயிறு] உணவகங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலலும் ஈடுபடலாம். மாலை 6 மணி முதல் 9 மணி வரையில் பார்சல் சேவையில் ஈடுபடலாம்.
*மின் வணிக சேவை நிறுவனங்களுக்கு ஞாயிற்றுகிழமைகளில் அனுமதி இல்லை.
*விளைபொருட்கள், எரிபொருள், மருந்துகள் மற்றும் அதன் சார்ந்த வாகனங்கள் முழு நேரமும் இயங்க அனுமதி.
*ஷாப்பிங் மால்கள், ஜவுளிக்கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இரவு 9 மணி வரையில் இயங்க
அனுமதிக்கப்படுகிறது.
*ஐ.டி.,உள்ளிட்ட நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களை வீட்டில்இருந்தே பணியமர்த்த நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது